முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று காலை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 90 சதவீதம் இடங்களுக்கு மேல் பிடித்து அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 21 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. முன்னதாக, உள்ளாட்சி தேர்தலையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திடீரென நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடம் நீடித்தது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெற்ற அபார வெற்றிக்கு ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்….

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு