முதல்வராகும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்வீட்..!!

டெல்லி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், பாஜகவில் இருந்து முதல் வெற்றி வாழ்த்து ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 74 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதேபோல் தேர்தலில் அமோக வெற்றி பெற்று வரும் திமுகவுக்கு வாழ்த்து என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னிலையில் இருக்கும் திமுகவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி முகம் காணும் திமுகவுக்கு என்னுடைய வாழ்த்துகள். 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்றார். இதேபோல கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நிர்மலா ட்விட்டரில், தமிழக தேர்தலில் வெற்றிபெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related posts

ரா.சம்பந்தன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 1,518 கன அடியாக குறைப்பு

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு