முதலமைச்சர் கோப்பை கைப்பந்து போட்டியில் என்.ஐ கல்லூரிக்கு பரிசு

தக்கலை, செப்.24 : கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் குமாரகோவில் என்.ஐ கல்லூரிக்கு பரிசு கிடைத்தது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் கைப்பந்து பிரிவில் குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 3ம் பரிசை வென்றுள்ளனர். கல்லூரி செயலாளர் ஏ.பி மஜீத்கான், கல்லூரி தலைவர் பைசல்கான், நூருல் உயர்கல்வி மைய இணை துணை வேந்தர்( நிர்வாகம்) கே.ஏ.ஜனார்த்தனன், கல்லூரி முதல்வர் இரா.மாரிமுத்து, கல்லூரி விளையாட்டு இயக்குநர் ஜெயராஜ், கல்லூரி ஆசிரியர் மன்ற செயலாளர் அனில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்