முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது

 

சேலம், மே 8: சேலத்தில் முட்புதரில் 500 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய வாலிபரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மண்டல எஸ்பி பாலாஜி மேற்பார்வையில், சேலம் எஸ்ஐ பெரியசாமி மற்றும் போலீசார் நேற்று சூரமங்கலம், பெரிய அம்மாபாளையம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரிய அம்மாப்பாளையம் பாரதி நகர் பகுதியில் முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை பதுக்கியவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ்(28) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு, ரேஷன் அரிசி கடத்தல் பதுக்கல் குறித்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். 18005995950 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணின் அறிவிப்பினை பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், சுங்கசாவடிபோன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை