முசிறி அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

முசிறி, ஏப்.16: முசிறி அருகே விவசாயியின் வீட்டில் பூட்டைஉடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே சேருகுடி திராவிடன் காலனியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் சீனிவாசன் (65). இவரது குடும்பத்தினர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வெளியூர் சென்று இருந்த நிலையில் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வயல்காட்டில் சென்று தண்ணீர் பாய்ச்சி விட்டு வீடு திரும்பியபோது முன்கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டினுள் சென்று பீரோவை பார்த்தபோது பீரோவில் உள்ள லாக்கரில் வைத்திருந்த இரண்டு பவுன் செயின், மூன்று பவுன் நெக்லஸ் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சீனிவாசன் முசிறி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்தில் மறைவிடத்தில் வைத்துச் சென்றதாகவும், இதனால் திருடன் சாவியை எடுத்து பூட்டைதிறந்து நகையை திருடிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?