Friday, July 5, 2024
Home » முக கவசம் அணியாமல் வந்த காவல் துணை கண்காணிப்பாளர் அபராதம் விதித்த விவகாரம்: காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

முக கவசம் அணியாமல் வந்த காவல் துணை கண்காணிப்பாளர் அபராதம் விதித்த விவகாரம்: காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய டிஜிபி

by kannappan

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகமெங்கும் காவல்துறை வாகனத் தணிக்கை செய்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறது. 13.01.2022 அன்று, சென்னை அண்ணாநகர் காவல் நிலைய எல்லையில் உதவி ஆய்வாளர் கேசவன், காவலர்கள்  அம்சவல்லி மற்றும்  செல்வம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களுடன் வாக்குவாதம் செய்து கோபத்தை தூண்டும் வகையில் பேசியும் காவலர்கள் பொறுமை இழக்காமல் நிதானத்துடனும், சமயோஜிததுடணும் நடந்து கொண்டனர். அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரித்ததில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் என்பது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரல் ஆனது. காவலர்கள் அந்த சூழலை கையாண்ட விதத்தை பாராட்டும் விதமாக சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை  இன்று  தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு டிஜிபி அலுவலகத்திற்கு  நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்….

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi