மீன் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஏப். 19: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் நேற்று, திருப்பூர் மாவட்ட மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் நலசங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டிற்கு அம்மா உணவகம் வழியாக வந்து செல்லும் பாதை மட்டும் உள்ளது. இதில் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன.

எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தருவதோடு, குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் இடத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்தி, மற்றுமொரு வழித்தடத்தை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போது உள்ள தற்காலிக மீன் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்களை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீன் வெட்டும் தொழிலாளர்கள் தொழில் செய்து வருகிறார்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related posts

வேடந்தாங்கல் அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒருமையில் பேசிய தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு