மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களில் உண்டியல் காணிக்கை ரூ.1.13 கோடி வசூல்

 

மதுரை, அக். 1: மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களின் உண்டியல் காணிக்கை ரூ.1.13 கோடி கிடைத்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களில் நிரந்தர உண்டியல்கள் மற்றும் 5 திருக்கோயில்களின் அன்னதான உண்டியல்கள் திறப்பு நேற்று இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

உண்டியல் திறப்பின் போது, கோயிலின் அறங்காவலர்குழுத் தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி திருக்கோயில் அறங்காவலர்கள், இந்து சமய நிலைத்துறை உதவி கமிஷனர்கள், கண்காணிப்பாளர்கள், சரக ஆய்வாளர்கள், பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். உண்டியல் திறப்பின் போது, ரூ. 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 165ம், பலமாற்று பொன் இனங்கள் 455 கிராம், வெள்ளி இனங்கள் 649 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 308 எண்ணம் வரப்பெற்றுள்ளன.

Related posts

விழுப்புரம் அருகே பரபரப்பு திருமணமான 4 மாதத்தில் விவாகரத்து வரன் பார்த்தவருக்கு சரமாரி அடி உதை மாப்பிள்ளை மீது போலீஸ் வழக்குப்பதிவு

டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மது பாட்டில்கள் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிப்பதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் நாராயணசாமி பரபரப்பு பேட்டி