Wednesday, July 3, 2024
Home » மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

by kannappan

தண்டையார்பேட்டை3: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார், நேற்று காலை ராயபுரம் 52வது வட்டத்திற்கு உட்பட்ட ஆடுதொட்டி, கிழக்கு மாதா கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, பஜார் தெரு, மரியதாஸ் தெரு, ராயபுரம் காவலர் குடியிருப்பு, மேற்கு மாதா கோயில் தெரு, நாகாத்தம்மன் கோயில் தெரு, செட்டி தோட்டம், மார்டன் லைன், கல்லறை சாலை, முத்தையா முதலி தெரு, ரயில்வே காலனி, காவலர் குடியிருப்பு, ஸ்டான்லி பணியாளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘மீனவர் நலன் கருதி ₹100 கோடிக்கு மேல் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட மீன்பிடி துறைமுகத்தில் சர்வதேச தரத்தில் மீன் மார்க்கெட் கட்டித்தரப்பட்டுள்ளது. ரூ.155 கோடி செலவில் மீன்பிடி துறைமுகத்தில் மேலும் பல்வேறு வசதி செய்து கொடுப்பதற்கு மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மீனவர் நலவாரியம் மூலம் கடந்தாண்டு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ரூ.1000 வீதம் 3 முறை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாக மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரண தொகையாக தலா ₹19,000 வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். இதுபோல் எந்த அமைச்சரும் செய்ததில்லை. எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார்….

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi