மீஞ்சூர் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்த புள்ளிமான்

 

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் ஊராட்சியில், முட்புதரில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் இருந்தது. இதைப்பார்த்த கிராமமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாபஞ்சாட்சரத்துக்கு தகவல் தெரிவித்தனர்.உடனே அவர் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தபோது, பலத்த காயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர் படுகாயங்களுடன் இறந்துகிடந்த புள்ளிமானை மீட்டு சென்றனர். இதுகுறித்து ,வனத்துறையினர் கூறுகையில், ‘இரை மற்றும் , தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமானை நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்ததில் உயிரிழந்திருக்கலாம்.’’ என தெரிவித்தனர்.

Related posts

குமரியில் மீண்டும் சாரல் மழை

நாகர்கோவிலில் 80 வக்கீல்கள் மீது புதிய சட்ட திருத்தத்தில் வழக்கு

பழையாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு