மிரட்டி பாலியல் பலாத்காரம்: தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் கைது

உளுந்தூர்பேட்டை, ஏப். 10: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மணிகண்டன்(30). இவரது தந்தையின் இரண்டாவது மனைவி திட்டக்குடி அருகே வசிஷ்டபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதில் மகள் உள்ளார். மணிகண்டனுக்கு தங்கை முறையான அவரை கடந்த 2020 முதல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் மணிகண்டன் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில் தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அடிக்கடி மிரட்டி இது போன்ற செயலில் ஈடுபடுவதாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மணிகண்டனின் தங்கை கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரித்தா வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார். தங்கை என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’