மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, அக்.9: தூத்துக்குடி நகர்கோட்ட மின்விநியோக செயற்பொறியாளர் ராம்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தூத்துக்குடி நகர்கோட்ட மின் விநியோகம் தொடர்பான மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (செவ்வாய்) தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், புளியம்பட்டி மின்விநியோக உதவி பொறியாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை