மின் தடை ரத்து

நிலக்கோட்டை, அக்.22: செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாகம் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் உள்ள, செம்பட்டி, பழையசெம்பட்டி, கோடாங்கிபட்டி, மொண்டபட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, சேடப்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, காமராஜர் நீர்த்தேக்கம், எஸ்.பாறைப்பட்டி, வண்ணப்பட்டி, வீரக்கல், கசவனம்பட்டி, அஞ்சுகம் காலனி, பாப்பனம்பட்டி, சமத்துவபுரம், பச்சமலையாகோட்டை, நடுப்பட்டி, உத்தையகவுண்டன்பட்டி மற்றும் அம்பாத்துரை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாகம் காரணமாக, அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல் இன்று மின்சாரம் வழங்கப்படும் என, செம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி