மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

 

திருவாரூர், ஜூலை 23: மின்கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் தினகரன் மற்றும் பொறுப்பாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில், கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இல்லாததால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் குறைந்து காணப்படும் நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு என்பது மேலும் பொது மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கும். மின்கட்டணம் அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும் ஏற்படும் என்பதால் மின்கட்டண உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை