மின் கட்டணத்தை குறைக்க அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

பல்லடம்: விசைத்தறி மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் ஆகியோர் சந்தித்து விசைத்தறிகளுக்கு மின் கட்டண சலுகை மற்றும் குறைக்கப்பட்ட மின் கட்டணம் கடந்த 1.9.2022 ம்தேதி முதல் கணக்கிட்டு அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்ததாக தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் வேலுசாமி தெரிவித்தார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை