மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதிகாரி உயிரிழப்பு

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், விஜிலென்ஸ் பிரிவில் உதவி பிரிவு அதிகாரியாக பணியாற்றி வந்தவர் மணிகண்டன் (50). இவர் நேற்று அலுவலக கட்டிடத்தின் 9வது தளத்தில் நின்று கொண்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது. அதை மணிகண்டன் பிடிக்க முயன்றபோது நிலை தடுமாறி படிக்கட்டில் உருண்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு