மின்மோட்டார் திருட்டு

 

ஆண்டிபட்டி, செப். 23: தேனி அருகே வீரப்ப அய்யனார் கோயில் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் கோபால் ராஜா(53). அல்லிநகரம் குவாரி சாலையில் உள்ள கோபால் ராஜாவுக்கு சொந்தமான தோட்டத்தில் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி மின் மோட்டாரை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் கோபால் ராஜா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை