மின்னல் தாக்கியதில் 3 விவசாயி பலி

கமுதி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முனியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(50). இவர் நேற்று மாலை வயல் பகுதியில் ஆடு  மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பழனிவேல் உயிரிழந்தார். இதேபோல் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேட்டுசோழந்தூரை சேர்ந்த குஞ்சரம் (48) நேற்று வயலுக்கு சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். மருதூரை சேர்ந்த முருகன்(43) நேற்று மாலை ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு  திரும்பி  கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்