மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஜூலை 23: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (24ம் தேதி) காலை 11 மணிக்கு சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரில் உள்ள சேலம் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு, குறைகளை கேட்டறிகிறார். எனவே சேலம் எதற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை சேலம் தெற்கு செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்