தஞ்சாவூர், ஜன.9: மின்சார வாகனங்கள் பயன்பாடு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் சார்பில் மின்சார வாகனங்கள் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளான சுற்று சூழல் இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து குறும்படம் பிரசார வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் நளினி கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்சார பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து கோட்டங்களுக்கும் (பகுதிகளுக்கும்) மின்சார வாகனம் உபயோகிப்பது தொடர்பாக விழிப்புணர்வு வாகனம் மூலம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டன.