திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் தண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(38). இவர் திருமழிசையில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதமாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உடனடியாக பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயமாலா(34) வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி
previous post