உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி (64). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பழனியின் வீட்டில் மின்சாரம் இல்லை. அதனால் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தில் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஏறிய அவர், மின்வயரை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து, பழனி கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….