மின்சாரம் தாக்கி பெண் பலி

சிங்கம்புணரி, ஜூலை 23: சிங்கம்புணரி காசியாபிள்ளைநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பரமேஸ்வரி (46). இவர் நேற்று, வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பரமேஸ்வரி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி போலீசார் பரமேஸ்வரி உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்