மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த பெண் சாவு

தர்மபுரி, செப்.3: தர்மபுரி டவுன் குப்பாண்டி தெருவைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி பச்சியம்மாள்(39). இவர்களுக்கு மகன், 3 மகள்கள் உள்ளனர். கடந்த 29ம் தேதி மாலை, பச்சியம்மாள் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, மிக்ஸியில் சட்னி அரைத்து விட்டு, சுவிட்சை ஆப் செய்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, தர்மபுரி மற்றும் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், கடந்த 31ம் தேதி இரவு மீண்டும் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பச்சியம்மாள் உயிரிழந்தார். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி