மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

வடமதுரை, ஜூன் 5: வடமதுரை பேரூராட்சிக்குட்பட்ட ரெட்டியபட்டி அருகே உள்ள லக்கன் தெருவில் வசிப்பவர் மூர்த்தி (37). இவர் மகன் இளவரசன் (9) அரசுபள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான.இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் வீட்டில் உள்ள மின்விசிறியை போடுவதற்கு சுவிட்ச் போர்டில் கை வைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்தார். அங்கு வந்த மூர்த்தி சிறுனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இளவரசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு