மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

 

இளையான்குடி, ஜூலை 7: இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் பூபாலன்(47). எலெக்ட்ரீசியன். நேற்று காலை சாலைக்கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பைப் லைனை சரி பார்த்துள்ளார். வீட்டின் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில், பூபாலன் தலை உரசியதில், மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த பூபாலனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்ப்பதிவு செய்த சாலைக்கிராமம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை