மின்சாரம் தாக்கி எலெக்ட்ரீசியன் பலி

மதுரை: மதுரை உச்சபரம்புமேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி அழகன். இவரது மகன் அழகுமணி (27). இவர் மதுரை மாநகராட்சியில் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது எலெக்ட்ரீசியன் வேலையும் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நத்தம் மெயின் ரோட்டில், சாமி படத்திற்கு சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அழகுமணி, திடீரென மின்சாரம் தாக்கியதால் பலியானார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் போலீசார், அவரது உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான அழகுமணிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்….

Related posts

மேலூர் நகராட்சியில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் ஆய்வு

கள்ளழகர் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.56 லட்சம்

ஆக்கிரமிப்பில் சிக்கிய பூங்காவை மீட்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு: மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு