ஏற்காடு, ஜூன் 20: ஏற்காடு அருகே உள்ள பெரியக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன் (40). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் நல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஏற்காட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. நல்லூர் பகுதியில் சென்றபோது, அங்கிருந்த மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து, குப்பன் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி பலி
previous post