மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார்ச்சாலை: பொதுமக்கள் புகார்

 

பல்லடம், ஜூன் 5: பல்லடம் மாணிக்காபுரம் சாலை பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்குள்ள மின் கம்பத்தை இடம் மாற்றாமலும், தரமில்லாமலும் தார் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க பலமுறை கூறியும். மின்கம்பத்தை இடம் மாற்றாமல் தார் சாலை அமைக்கின்றனர். மேலும் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யாத காரணத்தினால் கழிவு நீர் தேங்கி நின்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை இடம் மாற்றி அமைக்க வேண்டும். தரமான தார்ச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றனர்

 

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு