மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா

 

ஊட்டி, டிச.20: நீலகிரி மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. விழாவில், மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். தொடர்ந்து, அலங்கரித்து வைக்கப்பட்ட அன்பழகன் திருவுருவு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிர்வாகிகள் அனைவரும் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி, மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்திக், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரீட்டாமேரி, ரமேஷ், கஜேந்திரன், விஷ்னுபிரபு, ரகுபதி, தொமுச., மாவட்ட கவுன்சில் செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆட்டோ ராஜன், இடுஹட்டி ராமன், அமலநாதன், மார்கெட் ரவி, விஜயகுமார், ஜெகதீஷ், குண்டன், தருமன், காளி, செல்வன், மூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்