மாவட்ட அளவில் கபடி போட்டி திருச்சி அணி சாம்பியன்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே இரூர் கிராமத்தில் 65 கிலோ எடை கொண்ட நபர்களுக்கு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் பெரம்பலூர், திருச்சி, துறையூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் 60 அணிகள் 5 சுற்றுகளாக பங்கு பெற்றன. இதில் திருச்சி சேர்ந்த எஸ்.எம்.பள்ளி கபடி வீரர்கள் முதல் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் சேர்ந்த கபடி வீரர்கள் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் சேர்ந்த சகாரா கபடி வீரர்கள் மூன்றாவது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் இரூர் சேர்ந்த இளந்தமிழ் கபடி வீரர்கள் நான்காவது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இரூர் இளைஞர் நற்பணி மன்றம் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Related posts

நெல்லை- சென்னை வந்தே பாரத்துக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் நாசரேத் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்

வேப்பங்காடு பள்ளி ஆண்டுவிழா