மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

தர்மபுரி: தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 600 வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். தர்மபுரி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி, தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த சிலம்பு போட்டியில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் என மாவட்ட முழுவதிலுமிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்கள், பல்வேறு பிரிவுகளில் விளையாடி, தங்களது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கலைத்தாய் சிலம்பம் அறக்கட்டளை செய்திருந்தது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்