மாவட்டத்தில் 8 தாலுகாவில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் சிறப்பு முகாம்

நாமக்கல், ஜன.20: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மாதத்திற்கான குறைதீர் முகாம், இன்று (20ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை