Monday, September 30, 2024
Home » மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்: தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: நெல்லை ஆட்சியர் பேட்டி.!!!!

by kannappan

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார்.இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்யை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்றார். மாவட்டத்தில் இதுவரை முகவசம் அணியாமல் , சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமிருந்து ரூ. 41 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. கூடுதலாக 3000 ஆயிரம் மருத்துகள் வந்துள்ளது. தற்போது 2-வது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வட மாநிலத்தவர்கள் அதிகம் பணியாற்றும் கூடன்குளம் அணுமின் நிலையம் , மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் , சிப்காட் ஆகிய இடங்களில் அந்ததந்த நிறுவன வளாகத்தில் தனியாக பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்றும் பரிசோதனை முடிவுகள் கண்டறியும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும், பேசிய ஆட்சியர் விஷ்ணு, திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படுவதால் உயிரிழப்பு என்பது இல்லை. கொரோனா தடுப்பிசி பல்வேறு சோதனைகளுக்கு பின்பு தான் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதுகுறித்து அரசு தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு முறைகள் 100 சதவீதம் பின்பற்றப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார். …

You may also like

Leave a Comment

twelve + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi