மாலை கட்டும் தொழிலாளி மர்ம சாவு

வேடசந்தூர், அக். 27: வேடசந்தூர் ஆத்துமேடு ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). பூக்கடையில் மாலை கட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் ஆத்துமேடு பஸ் நிறுத்தம் அருகேயுள்ள வணிக வளாகத்தில் பூட்டியிருந்த ஒரு கடையின் முன்பாக மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விக்னேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை