காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், காலியாக உள்ள உதவி வரவேற்பாளர் (100% பார்வையற்றவர்களுக்கானது) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு ஆதரவற்ற விதவை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 18 முதல் 42 வயதுக்குள் 100% பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயர் நாற்காலி பின்னும் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளாக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் 100% மாற்றுத்திறனாளிகள் இன்று (12ம் தேதி) மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்பபட்டுள்ளது….