திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல்லில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். செயலாளர் பகத்சிங் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் வில்சன் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில், புதிதாக உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அதனை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார தேவையான உதவித் தொகையை வழங்காததால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நூறுநாள் வேலை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.