மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் முகாம்

பள்ளிபாளையம், ஜன.24: தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் அரசு சலுகைகள் பெறாத மாற்றுத்திறனாளிகள் 27ம் தேதி பள்ளிபாளையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தாசில்தார் தெரிவித்துள்ளார். திருச்செங்கோடு உட்கோட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை வரும் 27ம் தேதி பள்ளிபாளையம் ஜிவி மகாலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தெரிவித்துள்ளார். இம் முகாமில் மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கையினை மாவட்ட கலெக்டர் மேற்கொண்டுள்ளார். தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, அரசு உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், சுயதொழிலுக்கான வங்கி கடன்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம் என அவர் கூறியுள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை