மாறுபட்ட காலநிலையால் ரோஜா மலர்கள் அழுகி உதிர்கின்றன

ஊட்டி: ஊட்டியில் கடந்த இரு மாதங்களாக  உறைபனி விழாத நிலையில், ரோஜா பூங்காவில் அனைத்து செடிகளிலும் மலர்கள் காணப்பட்டன. கொரோனா ஊரடங்கிற்கு பின், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது சாரல் மழை, நீர் பனி என மாறுபட்ட காலநிலை நிலவிய நிலையில், தற்போது பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் உள்ள மலர்கள் அழுக துவங்கியுள்ளன.ஒரு சில செடிகளில் பனியில் கருகி மலர்கள் உதிர துவங்கியுள்ளது. இதேபோன்று மாறுபட்ட காலநிலை நிலவினால், ஓரிரு நாட்களில் அனைத்து செடிகளிலும் உள்ள மலர்கள் உதிர வாய்ப்புள்ளது. இதனால் ரோஜா பூங்காவிலும் மலர்கள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது….

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்; ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி