Wednesday, September 25, 2024
Home » மார்த்தாண்டம் அருகே மனைவி பிாிந்து சென்றதால் கொத்தனார் தற்கொலை

மார்த்தாண்டம் அருகே மனைவி பிாிந்து சென்றதால் கொத்தனார் தற்கொலை

by Karthik Yash

மார்த்தாண்டம், செப்.25: மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பாட்டவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். கொத்தனார். அவரது மனைவி லதா (39). இந்த தம்பதிக்கு 11 மற்றும் 10 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். ஜெகதீசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் லதா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். இதனால் ஜெகதீஸ் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வீட்டுக்கு வந்த ஜெகதீஸ் மறுநாள் காலையில் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்குள்ள படுக்கையறையில் மின்விசிறியில் லுங்கியால் தூக்கிட்டு ஜெகதீஸ் சடலமாக தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். இது குறித்து லதா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

eight − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi