மார்த்தாண்டம், ஜூன் 12: மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு கொட்டறச்சிவிளையை சேர்ந்தவர் சதானந்தம். அவரது மகன் பிரசாத்(28). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பைக்கை நிறுத்திவிட்டு பணி நிமித்தமாக சென்று விட்டார். இரவு 8.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. யாரோ மர்ம நபர் பைக்கை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பிரசாத் அளித்த புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.