மார்த்தாண்டம் அருகே சொத்து தகராறில் வாலிபருக்கு அடிஉதை

மார்த்தாண்டம், டிச.12 : மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நல்லூர் வட்டக்குழி விளையை சேர்ந்தவர் பிரபு லாதன் (35). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (48), என்பவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்து உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பிரபுலாதன் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து கொண்டிருந்தார். அப்போது முருகன், அவரது மனைவி மேரி சுசீலா, மகன் கிறிஸ்டியன் நிம்ஸ் ஆகியோர் பிரபுலாதனை சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த பிரபுலாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து