மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பழநி, ஜூன் 23: பழநி மின்வாரிய திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் முறைகேடுகளுடன் நடைபெறும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். 2024ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, அருள்செல்வன், கமலக்கண்ணன், நகர செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கனகு, சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் பகத்சிங் நன்றி கூறினார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு