மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை நகரத்தில் உள்ள 2000 ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் 5லி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் உலகநாதன் தலைமை வகித்தார்.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் மதி, தனசேகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்(பொ) கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்கபூபதி, மணியம்மா, சுரேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சண்முகப்பிரியா, விஸ்வநாதன், மெய்யப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கருப்பையா, முத்துகருப்பன், தங்கராஜ், மகாலிங்கம், அமுதாபிரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்