மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா

போச்சம்பள்ளி, ஆக.29: போச்சம்பள்ளி அருகில் உள்ள அயலம்பட்டியில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபராதனை நடைபெற்றது. பம்பை, தாரை, தப்பட்டையுடன் கரகம் ஊர்வலம் நடைபெற்றது. மாலையில் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண்கள் கூழ் எடுத்து சென்று அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு கூழ் ஊற்றினர். இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு