மாயமான மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை

வேலூர், மே 10: காட்பாடி அடுத்த சேனூர் களர்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி தனலட்சுமி(83). இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கணவர் முருகேசன் இறந்துவிட்டதால் தனலட்சுமி தனியாக வசித்து வந்தார். தனலட்சுமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை காணாததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று காலை களர்பாளையத்தில் உள்ள விவசாய கிணற்றில் தனலட்சுமி சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவலின்பேரில் விருதம்பட்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மூதாட்டி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து தனலட்சுமி கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்