மாயனூர் அருகே 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்தவர் கைது

 

கரூர், செப். 28: மாயனூர் அருகே 1 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்துள்ள முனியப்பனூர் பகுதியில் உளள ஒரு காட்டுப்பகுதியில கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, கரூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்