Sunday, July 7, 2024
Home » மாமல்லபுரம் அருகே பயங்கரம் மீனவ வாலிபர் சரமாரி வெட்டி கொலை

மாமல்லபுரம் அருகே பயங்கரம் மீனவ வாலிபர் சரமாரி வெட்டி கொலை

by kannappan

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையொட்டி உள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே வெட்டுக் காயங்களுடன் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக நேற்று காலை மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், டிஎஸ்பி ஜகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், மாமல்லபுரம் மீனவ குப்பத்தை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் மணிமாறன் (எ) அசோக் (26). நேற்று முன்தினம் இரவு அசோக், சாப்பிட்டு முடித்து, காற்று வாங்குவதற்காக கடற்கரைக்கு சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்தவேளையில் அவரை, மர்மநபர்கள் முகம், கை, கால் உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர் என தெரிந்தது.தொடர்ந்து, கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வந்து சென்றவர்கள் குறித்து, அங்குள்ள உணவக விடுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாலிபர்கள் வந்து கஞ்சா புகைக்கின்றனர். அப்படி, வருபவர்களுக்கும், அசோக் இடையே தகராறு ஏற்பட்டு, அவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றனரா, வேறு ஏதாவது முன்விரோதம் காரணமா அல்லது காதல் விவகாரமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

sixteen + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi