மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இந்த பட்டம் விடும் திருவிழா நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். இதனால் தேவநேரி முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டம் விடும் திருவிழாவை கண்டு ரசித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.