மானூர், மார்ச் 3: மானூர் அருகேயுள்ள மேலப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி மாரியம்மாள் (42). அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் பள்ளி, கல்லூரி அருகாமையில் புகையிலை விற்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதன் பேரில் மானூர் காவல் நிலைய எஸ்ஐ ரபினாமரியம் சம்பவ இடத்தில் விசாரனை செய்து, மாரியம்மாள் கடையில் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தார்.
மானூர் அருகே புகையிலை விற்ற பெண் கைது
previous post